தியாக திருநாள் வாழ்த்துகள்.!
தியாகம் செய்திடுவோமே..!
~~~~~~~
இறை ஆணையை ஏற்று,
இறையோனைப் போற்றி
தன்மகனைத் தானமாய்
தரத்துணிந்த தந்தையையும்,
அப்பெருந்தகையின் தியாகத்தையும் போற்றிடும்
இந்நன்னாளில்,நாமும் சில தியாகங்களை
செய்திட உறுதியேற்போம்..
கோபத்தையும்,பிறர் மேல்
சாற்றிடும் சாபத்தையும்,
போட்டிப் பொறாமை,
பொச்செரிப்பையும்
அதனால் நம் நெஞ்சத்தில்
எழும் நச்சரிப்பையும்..
பொய்ப்பேசி,புறம்பேசி,
தற்பெருமை கொண்டு,
சுயம்பேசி திரிவதையும்..
எப்பொழுதும் கைப்பேசி
என்றலையும் போக்கினையும்..
நானே எல்லாம் அறிந்தவன்
என்று இறுமாந்துலவும்
நஞ்சு நெஞ்சத்தினரையும்
விட்டகன்று,இறைவழி நின்று
சூதும்,வாதும்,வஞ்சனையும்
நம் நெஞ்சினை எரிக்கும்,
திருட்டும்,புரட்டும், நல்லவரை
நம்மிடம் இருந்து விரட்டும்
என்பதையும் உணர்ந்து..
மேற்சொன்ன கேடுதரும்
பேய்க்குணங்களை,
தியாகம் செய்திட ,
மனதார முனைவோமே..
வேலையற்றோரின்
வெற்று வாதம் குறித்து
விவாதித்து நேரவிரயம்
செய்யாமல் இருப்போம்
தீக்குணங்கள் போனாலே
நற்குணங்கள் நாடிவரும்..
வல்லவனின் அருள்மாரியும்
நம்மை தேடிவரும்...
உறவுகளுக்கும்,
நட்புக்களுக்கும்
தியாகத் திருநாள்
நல்வாழ்த்துக்கள்..
அவரத்தரின் கவிதைகள்
கூத்தாநல்லூர் அவரத்தர் சிராஜ் மைதீன்
Thursday, 28 May 2026
தியாக திருநாள் வாழ்த்துகள்.! தியாகம் செய்திடுவோமே..!
Monday, 23 March 2026
ஈத் பெருநாள் வாழ்த்துக்கள்.!
அஸ்ஸலாமு அலைக்கும்..
ஈத் பெருநாள் வாழ்த்துக்கள்.!
~~~~~~
புனித ரமலானில் மறை
படித்து,நாதர் நபி உரை படித்து,அழுது, தொழுது
மனதை உழுது,ஈகைப் பெருநாளை
எட்டிவிட்டோம்
இறைவன் அருளால்...
இந்த நோன்பு பெருநாளில்
ஈகை உணர்வு மேலோங்கி,
இன்ப உணர்வு தழைத்தோங்கி
உலகோர் நெஞ்சங்களில்
மனித நேயம் மலரட்டும்..
வளைகுடா போரில் சிக்குண்ட
நம் மக்கள்,இடரில் இருந்து மீளட்டும்,அவர்தம் நல்வாழ்வு நிலைப்பெற்று,நலம்பெற்று
இறை அருளோடு வாழட்டும்.
இணையில்லா வல்ல
ரஹ்மான் நம் துஆக்களை
ஏற்று அருள் புரிவானாக.!
அனைவருக்கும் இதயம்
கனிந்த ஈத் பெருநாள் வாழ்த்துக்கள்..
Tuesday, 16 September 2025
கூத்தாநல்லூரின் FOOTBALL LEGEND H.R. NOOR MOHAMED..
Thursday, 31 July 2025
YOUNG BLOOD & KC நண்பர்களுக்கு வாழ்த்துகள்..!
கைப்பேசியில் தொலைந்த
நவீன யுக காளைகளை,தடை
மீறித் தடுமாறும் யுவன்களை..
சகவாச சேர்க்கையால்
சுகவாசம் தேடி,போதையில்
சிக்கிய பதின்ம வயதினரை..,
மடை மாற்றி,உரமேற்றி,
உணர்வூட்டி, தடம் காட்டும்
கருவியே விளையாட்டு...
தொ(ல்)லைக்காட்சியும்
திறன்பேசிகளும் இல்லா
எங்கள் பள்ளிப்பருவத்தில்
(70 களில்) எங்களது ஒரே
சரணாலயம் அல்லிக்கேணி
விளையாட்டுத் திடலே.
கோடை விடுமுறையில்
தென்னிந்திய எழுவர்
கால்பந்து தொடர் போட்டி..
அல்லிக்கேணி திடல் தான்
எங்களது ஜாகையானது..
கே.சி கிளப்பும்
ஹண்டர்சும்
எங்களை ஆட்டுவிக்கும்
மந்திரச் சொல்லானது..
மந்திரக்கோலை கையில்
வைத்து,எங்களை மதி
மயக்கிய மந்திரவாதிகள்
HR நூர்,ரபியுதீன்,நிஜாம்,
யாசீன் சார் போன்ற
மதிப்புமிகு ஜாம்பவான்கள்..
தொலைக்காட்சி மோகத்தால்
கிரிக்கெட்டின் வேகத்தால்
கால்பந்து மீதான தாகம்
குறையவில்லை நமதூரில்..
காரணம்..மேற்சொன்ன
அண்ணன்மார்களே. நன்றி
சொல்வோம் அவர்களுக்கு..
அந்த ஜாம்பவான்கள்
வழி நின்று,YOUNG BLOOD
& KC நண்பர்கள்,பத்து
ஆண்டுகளுக்கு பின்,கால்
பந்து ரசிகர்களுக்கு,புது
ரத்தம் புகுத்தி இன்று
புத்துணர்வு தந்துள்ளனர்.
நன்றி கலந்த பராட்டுக்கள்..
நாளெல்லாம் பிரச்சனை
தோல்வியுற்றோரின்
அர்ச்சனை.. ஆனாலும்
துவளாமல், பிறழாமல்
AL NOOR TROPHY
போட்டியினை
திறன்பட நடத்திய
உங்களுக்கு வாழ்த்துகள்..
விளையாட்டுத் திடலை
சமன்படுத்தி, சீர்ப்படுத்தி,
இளைஞர்களை ஓரணியில்
நேர்படுத்தி,பந்தயத்தை
ஊர் அறிய,உலகறிய
நடத்திய நண்பர்களே..
கால்பந்து ரசிகர்கள்
உங்களைப் போற்றிப்
புகழ்வார்கள்..
உங்கள் சேவை ஆண்டு
தோறும் தொடரட்டும்..
Friday, 20 June 2025
குருதி கொடை தரும் வள்ளல்கள்
ரத்தம் சிந்தி தன்
குடும்பத்தை காப்போர்
பலர் உண்டு..
ரத்தம் தந்து அறியா
ஒருவரின் உயிர்
காப்பவர்களும் உண்டு..
பரிச்சயம் இல்லா யாரோ,
நலனில்லை என்றவுடன்
பலனில்லை தனக்கு
என்றாலும் குருதி
கொடுக்கும் கொடையாளர்கள்..
யார் இந்த தேவதைகள்??
யார் இந்த மகாத்மாக்கள்??
அன்பபே இவர்கள் மதம்..
கருணையே இவர்கள் ஜாதி..
இரக்கமே இவர்கள் குணம்..
சமத்துவமே இவர்கள் வழி.
ரத்த தானம் செய்ய
இந்த வள்ளல்கள்
சாயும் போது ஒரு
குடும்பம் உயர்கிறது..
இந்த மனித நேய
மாண்பாளர்களை..
முகம் அறியா
அன்பாளர்களை..
சுயநலமற்ற இத்தகு
தன்னார்வலர்களை
போற்றிடுவோம்..
Sunday, 19 January 2025
Wednesday, 22 May 2024
காக்கை சிறகினிலே நந்தலாலா'
மகாகவி பாரதி 'காக்கை
சிறகினிலே நந்தலாலா'
என்று கவி பாடினார் அன்று
நமதூரின் உண்ட லாலா
அனைத்தையும் கண்ட லாலா
ஊராரின் ஒரு சாரரை
காக்கையோடு ஒப்பிட்டு
ஆணவத்தில் பாடுகிறார்..
இல்லை இல்லை சாடுகிறார்..
பறவைகளில் ஒழுக்கமான
காகம்,பேறு கால குயிலுக்கு
கூடு தருமாம்,அதன் குஞ்சுக்கு
கரிசனமாய் உணவு தருமாம்..
உணவினை தன் இனத்தோடு
கூடி உண்ணும் சுபாவம் கொண்ட
காக்கைக்கு சுயநலமில்லை..
அதிகார மமதை இல்லை...
ஆணவத்திமிர் இல்லை..
நல்ல பண்புகளை சொல்லித்
தரும் காக்கையின் பெயரை
கெடுப்பதே பதவிக்கு
காக்காய் பிடிக்கும் கும்பலே..
எதையோ பகிர்ந்துண்ண
எத்தனித்தோர்,பகிர்ந்துண்ணும்
குணமுள்ள காக்கையை ஏனோ
கைத்தட்டி விரட்டுவார்களாம்..
காக்கைகள் கரைந்து ஊர்
கூட்டினால்,அவர்கள் கண்கள்
கரையும் கணங்கள் வரலாம்..
காக்கைகள் கரைந்தால்
விருந்தினர் வருவர் என்பது
தமிழ் மக்களின் நம்பிக்கை...
இங்கு காக்கைகள்
கரைவதால் வாரிய
விருந்தினர் வருவார்களோ..??
அதனால் தான் காகங்கள்
மேல் காழ்ப்புணர்ச்சியோ.?
ஊர் உறவின் முறை
ஜமாத் பெருமை மீட்பு குழு.

