ரத்தம் சிந்தி தன்
குடும்பத்தை காப்போர்
பலர் உண்டு..
ரத்தம் தந்து அறியா
ஒருவரின் உயிர்
காப்பவர்களும் உண்டு..
பரிச்சயம் இல்லா யாரோ,
நலனில்லை என்றவுடன்
பலனில்லை தனக்கு
என்றாலும் குருதி
கொடுக்கும் கொடையாளர்கள்..
யார் இந்த தேவதைகள்??
யார் இந்த மகாத்மாக்கள்??
அன்பபே இவர்கள் மதம்..
கருணையே இவர்கள் ஜாதி..
இரக்கமே இவர்கள் குணம்..
சமத்துவமே இவர்கள் வழி.
ரத்த தானம் செய்ய
இந்த வள்ளல்கள்
சாயும் போது ஒரு
குடும்பம் உயர்கிறது..
இந்த மனித நேய
மாண்பாளர்களை..
முகம் அறியா
அன்பாளர்களை..
சுயநலமற்ற இத்தகு
தன்னார்வலர்களை
போற்றிடுவோம்..
No comments:
Post a Comment