கைப்பேசியில் தொலைந்த
நவீன யுக காளைகளை,தடை
மீறித் தடுமாறும் யுவன்களை..
சகவாச சேர்க்கையால்
சுகவாசம் தேடி,போதையில்
சிக்கிய பதின்ம வயதினரை..,
மடை மாற்றி,உரமேற்றி,
உணர்வூட்டி, தடம் காட்டும்
கருவியே விளையாட்டு...
தொ(ல்)லைக்காட்சியும்
திறன்பேசிகளும் இல்லா
எங்கள் பள்ளிப்பருவத்தில்
(70 களில்) எங்களது ஒரே
சரணாலயம் அல்லிக்கேணி
விளையாட்டுத் திடலே.
கோடை விடுமுறையில்
தென்னிந்திய எழுவர்
கால்பந்து தொடர் போட்டி..
அல்லிக்கேணி திடல் தான்
எங்களது ஜாகையானது..
கே.சி கிளப்பும்
ஹண்டர்சும்
எங்களை ஆட்டுவிக்கும்
மந்திரச் சொல்லானது..
மந்திரக்கோலை கையில்
வைத்து,எங்களை மதி
மயக்கிய மந்திரவாதிகள்
HR நூர்,ரபியுதீன்,நிஜாம்,
யாசீன் சார் போன்ற
மதிப்புமிகு ஜாம்பவான்கள்..
தொலைக்காட்சி மோகத்தால்
கிரிக்கெட்டின் வேகத்தால்
கால்பந்து மீதான தாகம்
குறையவில்லை நமதூரில்..
காரணம்..மேற்சொன்ன
அண்ணன்மார்களே. நன்றி
சொல்வோம் அவர்களுக்கு..
அந்த ஜாம்பவான்கள்
வழி நின்று,YOUNG BLOOD
& KC நண்பர்கள்,பத்து
ஆண்டுகளுக்கு பின்,கால்
பந்து ரசிகர்களுக்கு,புது
ரத்தம் புகுத்தி இன்று
புத்துணர்வு தந்துள்ளனர்.
நன்றி கலந்த பராட்டுக்கள்..
நாளெல்லாம் பிரச்சனை
தோல்வியுற்றோரின்
அர்ச்சனை.. ஆனாலும்
துவளாமல், பிறழாமல்
AL NOOR TROPHY
போட்டியினை
திறன்பட நடத்திய
உங்களுக்கு வாழ்த்துகள்..
விளையாட்டுத் திடலை
சமன்படுத்தி, சீர்ப்படுத்தி,
இளைஞர்களை ஓரணியில்
நேர்படுத்தி,பந்தயத்தை
ஊர் அறிய,உலகறிய
நடத்திய நண்பர்களே..
கால்பந்து ரசிகர்கள்
உங்களைப் போற்றிப்
புகழ்வார்கள்..
உங்கள் சேவை ஆண்டு
தோறும் தொடரட்டும்..
Thursday, 31 July 2025
YOUNG BLOOD & KC நண்பர்களுக்கு வாழ்த்துகள்..!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment